FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

காந்தியடிகளின் பிறந்ததினம்: நாடு முழுவதும் உள்ள 600 சிறைக் கைதிகள் விடுதலை!

காந்தியடிகளின் பிறந்ததினத்தை முன்னிட்டு,  நாடு முழுவதும் உள்ள 150 சிறைகளில் உள்ள 600 கைதிகள் இன்று விடுவிக்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 2 அக்டோபர் 2019, 4:28 pm IST
பகிர்:

காந்தியடிகளின் பிறந்ததினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள 150 சிறைகளில் இருந்து 600 கைதிகள் இன்று விடுவிக்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மகாத்மா காந்தியடிகளின் 150-ஆவது பிறந்த தினவிழா இன்று நாடு முழுவதும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அரசு சார்பிலும் பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. 

இந்நிலையில், மகாத்மா காந்தியின் பிறந்ததினத்தையொட்டி, நாடு முழுவதும் உள்ள 150 சிறைகளில் இருந்து 600 கைதிகள் இன்று நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement

கொலை, பாலியல் வன்கொடுமை மற்றும் ஊழல் ஆகிய குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தவிர மற்ற கைதிகள் 600 பேர் விடுவிக்கப்படுவார்கள். இந்தக் கைதிகள் அனைவரும் சிறப்பு நிவாரணத் திட்டத்தின் கீழ் விடுவிக்கப்பட உள்ளனர். 

ஆனால், மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா சிறைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 80 குற்றவாளிகளின் விடுதலையானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த இரு மாநிலங்களிலும் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் தேர்தல் முடிந்த பின்னரே அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தில்லி திஹார் சிறையில் தேர்வு செய்யப்பட்ட ஐந்து சிறைக் கைதிகளில் மூன்று பேரை மட்டுமே விடுவிக்க சிறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அந்த மூவரில் இரு கைதிகள் முறையே ரூ.1 லட்சம் மற்றும் ரூ.50,000 அபராதம் செலுத்த வேண்டும் என்று திகார் சிறை இயக்குநர் ஜெனரல் சந்தீப் கோயல் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments