மும்பை தாராவியில் இன்று புதிதாக 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையானது 4 லட்சத்தைக் கடந்துவிட்டது. இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக 15,413 பேருக்கு தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 4,10,461-ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கரோனாவால் கடந்த 24 மணிநேரத்தில் 307 போ் பலியாகியுள்ளனர். இதையடுத்து, நாட்டில் ஒட்டுமொத்த பலி எண்ணிக்கையானது 13,254-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்ட 4,10,461 பேரில் 1,69,451 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 2,27,756 போ் குணமடைந்துள்ளனா்.
இந்த நிலையில் மும்பை தாராவியில் இன்று புதிதாக 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2170ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கரோனாவுக்கு இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 80-ஆக உள்ளது.