இந்தியா

மக்களுக்காக போராடுபவர்களுக்கே வாய்ப்பு கிடைக்கும்: ராகுல் காந்தி

DIN

ஹைதராபாத்: மக்களுக்காக போராடுபவர்களுக்கே வாய்ப்பு கிடைக்கும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்ததுள்ளார்.

மக்கள் மத்தியில் இருந்துகொண்டு அவர்களுக்காகப் போராடுபவர்களுக்கு அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் வாய்ப்பு கிடைக்கும் என்று ராகுல் காந்தி, தெலங்கானா காங்கிரஸ் கட்சித் தலைவர்களிடம் சனிக்கிழமை தெரிவித்தார்.

ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்திய அவர், மாநிலத் தலைவர்கள் தங்கள் குறைகளை ஊடகங்களுக்கு முன் கூற வேண்டாம் என்று எச்சரித்தார். மேலும் அந்தந்த தொகுதிகளுக்குச் சென்று களத்தில் பணியாற்றுமாறு வலியுறுத்தினார்.

தெலங்கானாவுக்கு தனது இரண்டு நாள் பயணத்தின் இரண்டாவது நாளான நேற்று, ஹைதராபாத்தில் உள்ள காந்தி பவனில் தெலங்கானா  காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் ராகுல் உரையாற்றினார்.

வரும் தேர்தல் டி.ஆர்.எஸ் மற்றும் காங்கிரஸுக்கு இடையே நேரடிப் போட்டியாக இருக்கும் என்று கூறிய அவர், தகுதியின் அடிப்படையில் மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

மக்கள் மத்தியில் உழைத்து, விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள், இளைஞர்களுக்காக போராடுபவர்களுக்கு தகுதி அடிப்படையில் வாய்ப்பு வழங்கப்படும் என்று ராகுல் காந்தி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறைச்சந்தையில் தவற விட்ட பணப்பை ஆந்திர மாநில தம்பதியரிடம் ஒப்படைப்பு -கைதிக்கு பாராட்டு

மேம்பாலத்தை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்

ரத்த தான முகாம்

மேலக்கடலாடி ஸ்ரீபாதாள காளியம்மன் களரி திருவிழா

வெளிநாடுகளில் வேலை தருவதாகக் கூறும் மோசடி நிறுவனங்களை நம்ப வேண்டாம்

SCROLL FOR NEXT