தில்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்திலும் போராட்டம்
சோனியா காந்தி மீதான அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சோனியா காந்தி மீதான அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகையில் சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தொடர்பான வழக்கில், காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி அமலாக்கத் துறை முன்பாக இன்று இரண்டாவது நாளாக ஆஜராகியுள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement
அந்த வகையில், தில்லி அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதுபோல, தில்லி நாடாளுமன்றத்தில் பேரணியில்ஈடுபட்ட ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதையும் படிக்க | தில்லியில் ராகுல் காந்தி உள்ளிட்ட எம்.பி.க்கள் கைது!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.