வெங்கைய நாயுடுவுடன் பாஜக மூத்த தலைவர்கள் சந்திப்பு
குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடுவுடன் மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் இன்று திடீரென சந்தித்துப் பேசியுள்ளனர்.
புது தில்லி: குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடுவுடன் மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் இன்று திடீரென சந்தித்துப் பேசியுள்ளனர்.
குடியசுரசுத் தலைவர் வேட்பாளரை இறுதி செய்வதற்காக இன்று மாலை பாஜக நாடாளுமன்ற குழுக் கூட்டம் நடைபெறுகிறது.
இதற்கிடையே, குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவை, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா ஆகியோர் புது தில்லியில் இன்று பிற்பகலில் சந்தித்துப் பேசியுள்ளனர்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க.. தமிழகத்தில் பரவலாக மழை: என்ன செய்திருக்கிறது அரசு?
குடியரசுத் தலைவர் வேட்பாளரை இறுதி செய்ய, வெங்கைய நாயுடுவுடன் பாஜக மூத்த தலைவர்கள் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாஜக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக வெங்கைய நாயுடு அறிவிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியிருக்கும் நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.