FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

காங்கிரஸில் என்னை யாரும் இயக்க முடியாது: மல்லிகார்ஜுன கார்கே

காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால் என்னை யாரும் இயக்க முடியாது என காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

Updated On : 8 அக்டோபர் 2022, 6:31 pm IST
பகிர்:

காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால் என்னை யாரும் இயக்க முடியாது என காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

இந்த மாதம் 17ஆம் தேதி நடைபெற உள்ள காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் அவர், தனக்கு ஆதரவு திரட்டுவதற்காக மாநிலங்கள்தோறும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரத்தில் பயணம் மேற்கொண்ட அவர், தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால் தன்னை யாரும் இயக்க முடியாது என தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது குறித்து மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது: “ காங்கிரஸ் கட்சியில் ரிமோட் கண்ட்ரோல் என்று ஒன்று இல்லை. பாஜக போல் அல்லாமல் காங்கிரஸ் தலைவர்கள் தேர்தல் நடத்தப்பட்டே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். எங்களது குழுக்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய நிர்வாகிகள் மூலம் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். நான் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் சோனியா காந்தியே என்னை இயக்குவார் எனப் பலரும் கூறி வருகின்றனர். ஆனால், காங்கிரஸில் யாரும் யாரையும் இயக்கவில்லை. காங்கிரஸ் எப்போதும் ஒன்றிணைந்தே ஒரு முடிவினை எடுக்கும். யாராவது என்னை இயக்குவார்கள் என நினைத்தால் அது விமர்சிப்பவர்களின் நினைவாக மட்டுமே இருக்கும்.

பாஜகவில் கட்சியின் தலைவரைத் தேர்தல் வைத்து தேர்ந்தெடுக்கும் கலாசாரமே கிடையாது. பிரதமர் எத்தனை முறை கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கு தேர்தல் நடத்த முடிவு செய்துள்ளார். உண்மையில், பாஜக தலைவர்கள் தேர்தலின்றி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இதிலிருந்து எந்தக் கட்சியில் பிண்ணனியில் இருந்து இயக்கப்படுகிறார்கள் என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments