FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

தில்லி வெள்ளத்துக்கு பாஜகவே காரணம்: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு!

தில்லியில் ஏற்பட்டுள்ள வெள்ளத்துக்கு பாஜக தலைமையிலான மத்திய அரசும், ஹரியாணா அரசுமே காரணம் என ஆம் ஆத்மி சார்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Updated On : 15 ஜூலை 2023, 4:37 pm IST
பகிர்:

தில்லியில் ஏற்பட்டுள்ள வெள்ளத்துக்கு பாஜக தலைமையிலான மத்திய அரசும், ஹரியாணா அரசுமே காரணம் என ஆம் ஆத்மி சார்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

பாஜக தலைமையிலான மத்திய அரசும், ஹரியாணா அரசும் தெரிந்தே தலைநகர் தில்லியை நோக்கி நீரை திறந்துவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்த ஆம் ஆத்மி அமைச்சர் சௌரப் பரத்வாஜ் கூறியதாவது: கடந்த 3-4 நாள்களாக தில்லியில் மழை இல்லை. இருந்தும், யமுனையில் தண்ணீர் அளவு 208.66 மீட்டரை எட்டியுள்ளது. ஹத்னிகுந்த் அணையிலிருந்து திறந்துவிடப்படும் நீர் வழக்கமாக மேற்கு கால்வாய், கிழக்கு கால்வாய் மற்றும் யமுனை வழியாக திறந்து விடப்படும். ஆனால், வேண்டுமென்றே ஜூலை 9 மற்றும் ஜூலை 13 நாள்களுக்கிடையே தண்ணீரானது யமுனை வழியாக மட்டுமே திறந்து விடப்பட்டுள்ளது. அதுவும் தில்லியை நோக்கி மட்டுமே திறந்து விடப்பட்டுள்ளது. மேற்கு கால்வாய் மற்றும் கிழக்கு கால்வாய் வழியாக தண்ணீர் திறந்துவிடப்படவில்லை என்றார்.

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலும் இதே குற்றச்சாட்டை நேற்று (ஜூலை 14) முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.

ஆம் ஆத்மியின் இந்த குற்றச்சாட்டுக்கு பாஜக தரப்பிலிருந்து இதுவரை எந்த ஒரு பதிலும் தரப்படவில்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments