FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

தில்லியில் புறநகர் ரயில் தடம்புரண்டு விபத்து

தில்லியில் புறநகர் ரயில் ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Updated On : 3 செப்டம்பர் 2023, 12:30 pm IST
பகிர்:

தில்லியில் புறநகர் ரயில் ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தில்லி பைரன் மார்க் அருகே புறநகர் ரயிலின் பெட்டி ஒன்று இன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதுகுறித்து ரயில்வே காவல் துணை ஆணையர் கூறியதாவது, புறநகர் ரயில் பெட்டி தடம்புரண்டதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 
ரயிலில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். பழுது பார்க்கும் பணிக்காக ரயில்வே ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தில்லியில் புறநகர் ரயில் பெட்டி  தடம்புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments