கோப்புப்படம்  
இந்தியா

இந்திய சிறையிலிருந்து 2 மியான்மர் பெண் கைதிகள் தப்பியோட்டம்!

மிசோரம் மாநிலத்தின் சிறையிலிருந்து 2 மியான்மர் நாட்டுப் பெண் கைதிகள் தப்பியோடியதைப் பற்றி..

DIN

மிசோரம் மாநிலத்தின் சிறையிலிருந்து இரண்டு மியான்மர் நாட்டு பெண் கைதிகள் தப்பியோடியுள்ளனர்.

கிழக்கு மிசோரமில், மியான்மர் நாட்டுடனான இந்திய எல்லை அமைந்திருக்கும் சம்பாய் மாவட்டத்திலுள்ள சிறையிலிருந்து மியான்மர் நாட்டைச் சேர்ந்த இரண்டு பெண் கைதிகள் தப்பியோடியுள்ளதாக இன்று (டிச.19) அம்மாநில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட மியான்மர் நாட்டைச் சேர்ந்த வன்சுயேனி (எ) சுயினுஃபேலி (36) மற்றும் லால்சான்மாவி (44) ஆகிய இருவரும் தகர ஓடுகளினால் செய்யப்பட்ட சிறைக் கழிவறையிலிருந்து தப்பியதாக கூறப்படுகின்றது.

முன்னதாக 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ந்தேதி அய்சுவாலிலுள்ள பெண்களுக்கான மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த லால்சான்மாவி அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

பின்னர், ஹெராயின் வைத்திருந்த 4 பேர் கைது செய்யப்பட்ட போது அவர்கள் அந்த போதைப்பொருளை தப்பியோடிய லால்சான்மாவியிடம் வாங்கியதாக கூறியுள்ளனர். அதனைத் தொடர்ந்து, இந்த வருடம் (2024) மே 11 அன்று அவர் காவல்துறையால் கைதுச் செய்யப்பட்டிருந்தார்.

தற்போது அவர் மீண்டும் வேறொரு பெண் கூட்டாளியுடன் தப்பியோடியது குறித்து சம்பாய் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காலி குடங்களுடன் மாதா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

புள்ளியியல் துறை சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 554 மனுக்கள்

ராணுவ வீரா் வீட்டில் திருட்டு

பேருந்தில் பயணியிடம் 3 பவுன் தங்க நகை திருடிய 2 பெண்கள் கைது

SCROLL FOR NEXT