மோடி தலைமையில் பாஜக கூட்டணி எம்பிக்கள் கூட்டம்!
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றவுள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் எம்பிக்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்துக்கு பதிலளித்து இரு அவைகளிலும் பிரதமர் மோடி இன்று உரையாற்றவுள்ளார்.
இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் எம்பிக்கள் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள் பங்கேற்றனர்.
Advertisement
Advertisement
பிரதமர் உரையின் போது நேற்று மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, மக்களவையில் பிரதமர் மோடி குறித்தும், அக்னிவீர், ஆர்எஸ்எஸ், பாஜக குறித்தும் ராகுல் காந்தி பேசிய சில கருத்துகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.