FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு - மாணவர் மீது கொடூர தாக்குதல்

Updated On : 28 மார்ச் 2024, 4:51 pm IST
மாதிரி படம்
பகிர்:

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் சக மாணவரை கத்தியால் குத்தியதாக காவலர்கள் தெரிவித்தனர்.

பிவண்டி பகுதியைச் சேர்ந்த அவர்கள் செவ்வாய்க்கிழமை 10-ம் வகுப்பு தேர்வு எழுதும்போது தங்களுக்கு தேர்வுத் தாளை காண்பிக்கவில்லை என்பதால் சக மாணவரைக் கத்தியால் தாக்கியுள்ளனர்.

இது குறித்து, “பள்ளி இறுதி வகுப்புத் தேர்வின்போது தாக்கப்பட்ட மாணவன் விடைத்தாளை காண்பிக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மற்ற 3 மாணவர்கள், அந்த மாணவர் தேர்வறையை விட்டு வெளியே வரும்போது அவரை பிடித்துவைத்து தாக்கியுள்ளனர். மேலும், கத்தியால் குத்தினர், காயமடைந்த மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்” எனக் காவலர்கள் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

காயம்பட்ட மாணவர் மருத்துவமனையில் இருந்து திரும்பியுள்ளார். தாக்கிய 3 பேரின் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 324-ன் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளதாக சாந்தி நகர் காவலர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments