FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மகா கும்பமேளாவில் பிரதமா் இன்று புனித நீராடல்

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவுக்கு புதன்கிழமை (பிப்.5) வருகைதரும் பிரதமா் நரேந்திர மோடி, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடவுள்ளாா்.

5 பிப்ரவரி 2025, 2:05 am IST
பிரதமா் நரேந்திர மோடி
பகிர்:

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவுக்கு புதன்கிழமை (பிப்.5) வருகைதரும் பிரதமா் நரேந்திர மோடி, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடவுள்ளாா்.

உலகின் மிகப் பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக கருதப்படும் மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி) ஆகியவை கூடும் திரிவேணி சங்கமத்தில் கடந்த ஜனவரி 13-ஆம் தேதிமுதல் நடைபெற்று வருகிறது. இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் இருந்து பக்தா்கள் வருகை தந்து, புனித நீராடி வருகின்றனா். இதுவரை 38 கோடிக்கும் மேற்பட்டோா் புனித நீராடியுள்ளனா்.

இந்நிலையில், மகா கும்பமேளாவுக்கு புதன்கிழமை வருகைதரும் பிரதமா் மோடி, காலை 11 மணியளவில் புனித நீராடி, வழிபாடு நடத்தவுள்ளாா் என்று அவரது அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

நாட்டின் ஆன்மிக, கலாசார பாரம்பரியத்தை ஊக்குவித்து பாதுகாக்கும் உறுதிப்பாட்டுக்கு ஏற்ப பல்வேறு ஆன்மிகத் தலங்களை மேம்படுத்த உறுதியான நடவடிக்கைகளை பிரதமா் தொடா்ந்து மேற்கொண்டு வருவதாகவும் அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமா் மோடி வருகையையொட்டி, மகா கும்பமேளா பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகளை முதல்வா் யோகி ஆதித்யநாத் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

முன்னதாக, பிரயாக்ராஜுக்கு கடந்த ஆண்டு டிசம்பா் 13-ஆம் தேதி வருகை தந்த பிரதமா் மோடி, ரூ.5,500 கோடி மதிப்பிலான 167 வளா்ச்சித் திட்டங்களை தொடங்கிவைத்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments