இரண்டு நாள் பயணமாக ரேபரேலி செல்கிறார் ராகுல் காந்தி!
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக தனது தொகுதியான ரேபரேலிக்குச் செல்லவிருக்கிறார்.
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக தனது தொகுதியான ரேபரேலிக்குச் செல்லவிருக்கிறார்.
எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி, தனது சொந்தத் தொகுதியான உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலிக்கு செல்லவிருக்கிறார்.
ராகுல் காந்தியின் ரேபரேலி பயணம் குறித்து காங்கிரஸ் எம்.பி. கே.எல். சர்மா கூறுகையில்,
Advertisement
Advertisement
'இது இரண்டு நாள் பயணமாக இருக்கும். லக்னெள விமான நிலையத்திற்கு வரும் ராகுல் காந்தி முதலில் கட்சி நிர்வாகிகளைச் சந்திக்கிறார்.
அதன்பின்னர் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண்களுடன் கலந்துரையாடுகிறார்.
அவர் கும்பமேளாவில் பங்கேற்கும் திட்டம் எதுவும் இல்லை' என்று கூறினார்.
ராகுல் காந்தி பிப். 21, 22 ஆகிய நாள்களில் ரேபரேலி செல்வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக கடந்த மக்களவைத் தேர்தலில் ரேபரேலி, கேரளத்தில் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியை தக்கவைத்துக்கொண்டார்.
வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜிநாமா செய்த நிலையில் கடந்த நவம்பரில் நடைபெற்ற வயநாடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.