FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

தில்லி அமைச்சரவையில் துறைகள் ஒதுக்கீடு!

தில்லி அமைச்சரவைக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

Updated On : 20 பிப்ரவரி 2025, 6:24 pm IST
பிரதமர் மோடியுடன் தில்லி முதல்வர் மற்றும் அமைச்சர்கள்...
பகிர்:

தில்லி அமைச்சரவைக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 48 இடங்களில் வென்ற பாஜக, ஆம் ஆத்மியிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றி 27 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆட்சியமைத்துள்ளது. தில்லி முதல்வரையும் பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவரையும் தேர்ந்தெடுக்கும் கூட்டத்தில், தில்லி முதல்வராக ரேகா குப்தா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, தில்லி ராம்லீலா மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற விழாவில் முதல்வராக ரேகா குப்தா பதவியேற்றுக் கொண்டார். சுஷ்மா ஸ்வராஜ், ஷீலா தீட்சித், அதிஷி ஆகியோருக்குப் பிறகு நான்காவது பெண் முதல்வர் என்கிற பெருமையை ரேகா குப்தா பெற்றுள்ளார்.

Advertisement

Advertisement

இதையும் படிக்க... முதல் பேரவைத் தேர்தலிலேயே முதல்வர் பதவி..! யார் இந்த ரேகா குப்தா?

தில்லி அமைச்சர்களாக பர்வேஷ் வர்மா, ஆஷிஷ் சூட், மஞ்சிந்தர் சிங் சிர்ஷா, ரவீந்தர் இந்தரராஜ் சிங், கபில் மிஸ்ரா மற்றும் பங்கஜ் குமார் சிங் ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர். பர்வேஷ் வர்மா துணை முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், தில்லி அமைச்சரவையில் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அவர்களில் முதல்வர் ரேகா குப்தாவுக்கு உள்துறை மற்றும் நிதித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. துணை முதல்வர் பர்வேஷ் சிங் வர்மாவுக்கு கல்வி, பொதுப் பணித்துறை மற்றும் போக்குவரத்துத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மஞ்சிந்தர் சிங் சிர்ஷாவுக்கு சுகாதாரம், நகர்ப்புற மேம்பாடு, கபில் மிஸ்ராவுக்கு குடிநீர் மற்றும் சுற்றுலாத் துறையும், இந்திரராஜுக்கு சமூக நலன், எஸ்சி/எஸ்டி நலத்துறை மற்றும் தொழிலாளர் நலன் துறையும், ஆஷிஷ் சூட்டுக்கு வருவாய் மற்றும் சுற்றுச்சூழல் துறையும், பங்கஜ் குமார் சிங்குக்கு சட்டத்துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்க... தில்லியில் பாஜக அரசுக்குக் காத்திருக்கும் புதிய சவால்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments