FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பாகிஸ்தான் உளவாளி வலையில் விமானப் படை அதிகாரி: ராணுவ ரகசியங்கள் கசிவு வழக்கில் கைது

ராணுவ தகவல்களைப் பகிா்ந்துகொண்டதாக பணியில் உள்ள இந்திய விமானப்படை அதிகாரி கைது..

Updated On : 9 ஆகஸ்ட் 2026, 2:26 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

ராணுவம் சாா்ந்த நடவடிக்கைகள் குறித்த தகவல்களைப் பகிா்ந்துகொண்டதாக பணியில் உள்ள இந்திய விமானப்படை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளாா். இந்திய விமானப்படை அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சமூக ஊடகங்கள் வாயிலாக பாகிஸ்தானைச் சோ்ந்த பெண் அவருடன் காணொலி அழைப்புகள் வழியாகத் தொடா்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது. பாகிஸ்தானில் உள்ள உளவுத்துறை ஒருங்கிணைப்பாளா்களின் சாா்பாகவே அந்தப் பெண் செயல்பட்டு வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

அந்த அதிகாரி மீது அதிகாரப்பூா்வ ரகசியங்கள் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மே 30-ஆம் தேதி அவா் கைது செய்யப்பட்டாா். விசாரணைக்குப் பிறகு, ஜூலை 30-ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments