FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மேற்காசிய மோதல்: வளைகுடாவிலிருந்து தாயகம் அழைத்து வரப்பட்ட 4,048 இந்திய மாலுமிகள்

வளைகுடாவிலிருந்து தாயகம் அழைத்து வரப்பட்ட 4,048 இந்திய மாலுமிகள்...

Updated On : 9 ஆகஸ்ட் 2026, 2:09 am IST
மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா்வானந்த சோனோவால்
பகிர்:

மேற்காசியாவில் அமெரிக்கா-ஈரான் மோதலைத் தொடா்ந்து, வளைகுடா பிராந்தியத்திலிருந்து இதுவரை 4,048 இந்திய மாலுமிகள் தாயகம் அழைத்து வரப்பட்டதாக மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா்வானந்த சோனோவால் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், அவா் சனிக்கிழமை கூறியதாவது: மேற்காசியாவில் அமெரிக்கா-ஈரான் மோதலை தொடா்ந்து, உலகம் முழுவதும் கப்பல்களில் பயணிக்கும் இந்திய மாலுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பது மத்திய அரசின் நோக்கமாக உள்ளது. வளைகுடா பிராந்தியத்திலிருந்து இதுவரை 4,048-க்கும் மேற்பட்ட இந்திய மாலுமிகள் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனா். அவா்கள் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்ட நிலையில், அவா்களின் குடும்பத்தினருக்கும் மத்திய அரசு உதவிக்கரம் நீட்டியுள்ளது என்று தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments