நீட் தேர்வு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த காவலர் ராஜிநாமா!
நீட் தேர்வு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து காவலர் ராஜிநாமா செய்திருப்பது பற்றி....
மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து உத்தரகண்ட் காவலர் செர் சிங் தனது பணியை ராஜிநாமா செய்தார்.
உத்தரகண்ட் மாநிலம், பித்தோராகரில் காவலராக பணியாற்றி வந்தவர் செர் சிங். இன்று தில்லி ஜந்தர் மந்தர் வந்த இவர், மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தனது ராஜிநாமா கடிதத்தை சிஜேபி தலைவர் அபிஜீத் தீப்கேவிடம் வழங்கினார்.
இந்த விடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, காவல் ஆய்வாளர் நிவேதிதா குக்ரேட்டி கூறுகையில், பித்தோராகரில் பணியாற்றி வந்த அந்த காவலர் ஜூன் 28 முதல் பணிக்கு வராததால், ஜூலை 20ஆம் தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
Advertisement
Advertisement
பித்தோராகர் காவல் கண்காணிப்பாளர் விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
ஆனால் அவர் எந்தப் பதிலும் அளிக்காததால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கடந்த ஆண்டு வழக்கு ஒன்றிலும் அவர் கைது செய்யப்பட்டதாகவும் பின்னர் ஜாமீனில் வந்த அவரை பணியில் இருந்து நிரந்தரமாக நீக்குவதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வந்தன என்றார்.
Former Uttarakhand Police constable Sher Singh, who gained attention after appearing to announce his resignation during a protest at Jantar Mantar in New Delhi, has been under suspension and was previously jailed in relation to an alleged illegal land grabbing case, Uttarakhand Police confirmed.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.