நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் போராட்டம்!
நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் போராட்டம் நடத்துவது பற்றி...
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவியிலிருந்து நீக்கக் கோரி நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று தில்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்களும் தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி 5-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Advertisement
Advertisement
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ், சமாஜவாதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் எம்பிக்கள் கலந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தர்மேந்திர பிரதானை பதவியிலிருந்து நீக்கக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்ட நிலையில், பகல் 12 மணி வரை இரு அவைகளின் நடவடிக்கைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இன்று நடைபெறவுள்ள மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி விடியோ வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
INDIA bloc MPs protest in Parliament!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.