FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்கா

மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா என்றும், தவறுக்கு மத்திய அரசு மன்னிப்புக் கேட்க வேண்டும் எனவும் பிரியங்கா வலியுறுத்தியிருக்கிறார்.

Updated On : 28 ஜூலை 2026, 5:12 pm IST
மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி பேசியபோது... - sansad tv
பகிர்:

புது தில்லியில், ஜந்தர் மந்தர் பகுதியில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அவர்கள் என்ன தீவிரவாதிகளா? என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா கேள்வி எழுப்பியிருக்கிறார்.

மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்த பொதுத் தேர்வுகள் முறைகேடு திருத்த மசோதா மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று மாலை காங்கிரஸ் எம்.பி பிரியங்கா விவாதத்தில் பங்கேற்று பேசுகையில், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? மாணவர்கள் மீது பெல்லட் குண்டுகள், கண்ணீர் புகைக் குண்டுகள் வீசியது ஏன்?

ஜந்தர் மந்தரில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் காந்தியின் அகிம்சை வழியில்தான் போராட்டினார்கள். எனினும் அவர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

இளைஞர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டதற்கு உத்தரவிட்டு அனுமதி வழங்கியது யார் என்றும் பிரியங்கா கேள்வி எழுப்பியிருக்கிறார்.

நீட் வினாத்தாள் கசிவை எதிர்த்துப் போராடிய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தவறுக்குப் பொறுப்பேற்று மத்திய அரசு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் பிரியங்கா காந்தி வலியுறுத்தியிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments