FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பிகார், அசாம் மாணவர்கள் மீதான வழக்குகள் வாபஸ்! சிஜேபி தகவல்

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் தகவல்...

Updated On : 28 ஜூலை 2026, 8:57 am IST
சௌரவ் தாஸ் - கோப்புப் படம்
பகிர்:

போராட்டம் நடத்திய பிகார், அசாம் மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறுவதாக அந்த மாநில அரசுகள் உறுதியளித்துள்ளதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் கூறியுள்ளார்.

தில்லியில் கடந்த ஜூலை 20 அன்று போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெற வேண்டும் என்ற சிஜேபியின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. அதன்பின்னரே சிஜேபியின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

எனினும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராடிய மாணவர்களை கைது செய்வதாகத் தகவல்கள் வெளியாகின. இதற்கு சிஜேபி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. மாணவர்கள் கைது செய்யப்பட்டால் மீண்டும் போராட்டம் நடத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடிய பிகார், அசாம் மாநில மாணவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

புதிய வழக்குகள் எதுவும் பதிவு செய்யப்படாது என்றும் எழுத்துப்பூர்வமாக பிகார், அசாம் மாநில அரசுகள் உறுதியளித்துள்ளதாகவும் அறிவிப்பாணைகளின் நகல்களை அரசுப் பிரதிநிதிகள் தங்களிடம் பகிர்ந்துகொண்டதாக சிஜேபி செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் தெரிவித்துள்ளார்.

பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளை திரும்பப் பெறுதல், எதிர்காலத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காதிருத்தல், தடுப்பில் வைக்கப்பட்டவர்கள் மற்றும் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் விடுவித்தல் என அந்த அறிவிப்பாணையில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதாக எக்ஸ் பக்கத்தில் சௌரவ் தாஸ் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசு மற்றும் பாஜக ஆளும் மற்ற மாநிலங்களும் இந்த உத்தரவாதத்தை எங்களுக்கு நாளைக்குள் வழங்க வேண்டும் என்றும் எந்தவொரு இளைஞரையும் இந்தச் சூழலில் தனியாகப் போராட நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.

summary

Cases against students from Bihar and Assam withdrawn: CJP

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments