FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தமிழகம், புதுவை உள்பட 4 மாநிலங்களுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!

தமிழகம், புதுவை உள்பட 4 மாநிலங்களுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது தொடர்பாக...

40 வினாடிகள் முன்பு
தேர்தல் ஆணையம் - கோப்புப் படம்
பகிர்:

தமிழகம், புதுவை உள்பட 4 மாநிலங்களுக்கான இடைத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கும் புதுவையில் தட்டாஞ்சாவடி தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

மேற்கு வங்க மாநிலத்தில் நந்திகிராம் தொகுதிக்கும் அசாம் மாநிலத்தில் நாகான் தொகுதிக்கும் இடைதேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், தமிழகம், புதுவை உள்பட 4 மாநிலங்களில் உள்ள 6 தொகுதிகளுக்கும் அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வேட்புமனு தாக்கல் தொடங்கும் நாள் - செப். 9

வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் - செப். 16

வேட்புமனு திரும்பப்பெற கடைசி நாள் - செப். 19

அக். 9 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தை விதிகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அக். 11 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

The Election Commission of India has announced by-elections for four states, including Tamil Nadu and Puducherry.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments