FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பள்ளிக்கல்வித் துறை சார்பாக மேலும் 42 புதிய அறிவிப்புகள் இன்று வெளியிடப்படலாம்!

அந்த வகையில் பிளஸ் ஒன் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு வைத்தல் முதலிய புது அறிவிப்புகளுடன் மேலும் பல புதிய 42 விதமான அறிவிப்புகள் பள்ளிக் கல்வித் துறை சார்பாக இன்று வெளியாகலாம் என்று கூறப்பட்டுள்ளது.

22 ஜூலை 2025, 4:48 pm IST
பகிர்:

கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் நாளை திறக்கப் படவிருக்கின்றன. இந்நிலையில் பள்ளிக் கல்வித் துறை சார்பாக 42 புதிய அறிவிப்புகள் இன்று அறிவிக்கப்பட இருப்பதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளிவந்த போது; கடந்த வருடங்களைப் போல் இல்லாமல் அதிரடியாக மதிப்பெண் அடிப்படையிலான மாணவர்களின் தர வரிசைப் பட்டியல் தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்களில் வெளியிடப் படக்கூடாது எனும் முடிவை எடுத்தது முதல் பள்ளிக்கல்வித் துறையில் மாணவர்கள் நலன் சார்ந்து பல்வேறு மாற்றங்களைக்  கொண்டு வரும் முடிவில் இருக்கிறது தமிழக அரசு.

அந்த வகையில் பிளஸ் ஒன் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு வைத்தல் முதலிய புது அறிவிப்புகளுடன் மேலும் பல புதிய 42 விதமான அறிவிப்புகள் பள்ளிக் கல்வித் துறை சார்பாக இன்று வெளியாகலாம் என்று கூறப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments