FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

முன்னாள் நீதிபதி கர்ணனின் ‘ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி’ கொடி அறிமுகம்!

சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் லஞ்சம் வாங்கியதற்கான ஆதாரங்கள் இருக்கிறது. அதனால் அவர்கள் மீது புகார் அளித்தேன். விசாரணைக்குச் சென்ற என் மீது... நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் போட்டு சிறையில் அடைத்தார்கள்.

Updated On : 8 ஜூன் 2018, 3:59 pm IST
பகிர்:

முன்னால் நீதிபதி கர்ணன் தனது கட்சிக் கொடியை இன்று அறிமுகம் செய்தார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நீதிபதி கர்ணன் ‘ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சியை’ தொடங்குவதாக கடந்த மாதம் கொல்கத்தாவில் அறிவித்தார். இந்நிலையில் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நடைபெற்ற விழாவில் தனது கட்சியின் கொடியை இன்று அவர் அறிமுகம் செய்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் தலை விரித்தாடும் ஊழலை ஒழிப்பதற்காகவே தான் கட்சி தொடங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

‘சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் லஞ்சம் வாங்கியதற்கான ஆதாரங்கள் இருக்கிறது. அதனால் அவர்கள் மீது புகார் அளித்தேன். விசாரணைக்குச் சென்ற என் மீது... நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் போட்டு சிறையில் அடைத்தார்கள். ஆனாலும், மீண்டும் எனது புகாரை விசாரணைக்குக் கொண்டு வரவேண்டும். அதைப் பற்றிய விவாதங்களை பாராளுமன்றத்தில் எழுப்ப வேண்டும் என்பதற்காகவே நான் புதிய கட்சியைத் தொடங்கியுள்ளேன். பாராளுமன்றத்தில் எனது புகாரைப் பற்றிய விவாதத்தை எழுப்ப வேண்டுமானால் எம் பி க்களைத் தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டும். அதற்காகவும் தான் நான் இந்த அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளேன். என்னுடைய கட்சி காட்டாற்று வெள்ளம் போல வேகம் கொண்டது. எந்த அரசியல் கட்சி எங்களை எதிர்த்து நின்றாலும் நாங்கள் நிச்சயம் வெற்றி பெற்று பாரளுமன்றத்துக்குள் நுழைவோம். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா பத்தாயிரம் ரூபாய் ஆறுதல் தொகை அளிப்பதாக நான் அறிவித்திருந்தேன். அவர்களுக்கு 1, 30,000 ரூபாய் நான் தர வேண்டும். அதை நானே சென்று அவர்களிடம் அளிப்பேன். என முன்னாள் நீதிபதி கர்ணன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments