FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

உ.பி: முதல் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது

உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு வியாழக்கிழமை (பிப்.10) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

Updated On : 10 பிப்ரவரி 2022, 8:55 am IST
பகிர்:



லக்னௌ: உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு வியாழக்கிழமை (பிப்.10) காலை 7 மணிக்கு தொடங்கி அமைதியாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் வரிசையில் நின்று தங்களது வாக்கை பதிவு செய்து வருகின்றனர்.

403 பேரவைத் தொகுதிகளைக் கொண்ட  உத்தர பிரதேசத்தில் பேரவைத் தேர்தல் இன்று வியாழக்கிழமை தொடங்கி மார்ச் 7 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 

முதல் கட்டத் தோ்தல், மேற்கு உத்தர பிரதேசத்தில் உள்ள ஷாம்லி, ஹாபூா், கௌதம்புத்தா நகா், முசாஃபா்நகா், மீரட், காஜியாபாத், புலந்த்சாஹா், அலிகா், மதுரா, ஆக்ரா, பாக்பத் ஆகிய 11 மாவட்டங்களுக்கு உள்பட்ட 58 தொகுதிகளில் 
இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

Advertisement

Advertisement

முதல் கட்டத் தேர்தலில் முதல்வர் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள சுரேஷ் ராணா, அதுல் கர்க், சந்தீப் சிங், அனில் சர்மா உள்ளிட்ட 9 பேர் உள்பட 623  வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2.27 கோடி பேர் தங்களின் வாக்கை பதிவு செய்ய உள்ளனர்.  

வாக்குப் பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

முதல் கட்டத் தேர்தல் நடைபெறும் 58 தொகுதிகளில் கடந்த 2017 இல் நடைபெற்ற தேர்தலில் பாஜக 53 தொகுதிகளிலும், சமாஜவாதி, பகுஜன் சமாஜ் கட்சி தலா 2 தொகுதிகளிலும், ராஷ்ட்ரீய லோக் தளம் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments