FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

ஜஸ்பிரித் பும்ராவை எதிர்கொள்ள ஆர்வமாக உள்ளேன்: சாம் கொன்ஸ்டாஸ்

ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சை எதிர்கொள்ள மிகவும் ஆர்வமாக இருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் இளம் வீரர் சாம் கொன்ஸ்டாஸ் தெரிவித்துள்ளார்.

Updated On : 22 டிசம்பர் 2024, 8:28 pm IST
சாம் கொன்ஸ்டாஸ் - படம் | ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்
பகிர்:

ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சை எதிர்கொள்ள மிகவும் ஆர்வமாக இருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் இளம் வீரர் சாம் கொன்ஸ்டாஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி மெல்போர்னில் வருகிற டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்கவுள்ளது.

முதல் மூன்று போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்று விளையாடிய நாதன் மெக்ஸ்வீனி, கடைசி இரண்டு போட்டிகளில் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக இளம் வீரர் சாம் கொன்ஸ்டாஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

ஆர்வமாக உள்ளேன்

5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ள நிலையில், பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் பும்ரா பந்துவீச்சை எதிர்கொள்ள மிகவும் ஆர்வமாக இருப்பதாக சாம் கொன்ஸ்டாஸ் தெரிவித்துள்ளார்.

ஜஸ்பிரித் பும்ரா

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சை அதிகம் பார்க்க மாட்டேன். அவரது பந்துவீச்சுகளை ஏற்கனவே அதிகம் பார்த்துள்ளேன். அவரது பந்துவீச்சுக்கு எதிராக விளையாட இருப்பது மிகுந்த ஆர்வமாக இருக்கிறது. நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். எனது திறமையின் மீது நம்பிக்கை வைத்து, கடினமாக உழைத்து வருகிறேன். ஆஸ்திரேலிய அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளதை மிகப் பெரிய கௌரவமாக கருதுகிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments