FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!

இந்தியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டிக்கான அணியை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.

Updated On : 10 நவம்பர் 2024, 11:45 am IST
கோப்புப்படம். - DOTCOM
பகிர்:

இந்தியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டிக்கான அணியை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியா - இந்தியா மோதும் பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நவம்பரில் நடைபெற உள்ளது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் முதல் போட்டி பெர்த்தில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் நவம்பர் 22ஆம் தேதி தொடங்குகிறது.

இந்த தொடரின் மூலம், அடுத்தாண்டு நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் அணிகள் முன்னேற்றம் அடைய வாய்ப்பு கிடைக்கும். கடந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றாலும், பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்தியாவே அதிக முறை வெற்றி பெற்றுள்ளது.

Advertisement

Advertisement

விராட் கோலியின் ஃபார்மை வைத்து அவரை மதிப்பிடாதீர்கள்: ரிக்கி பாண்டிங்

மேலும், கடைசியாக விளையாடிய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் இந்தியா கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டிக்கான அணியை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.

அணி விவரம்: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), ஜோஷ் ஹேசல்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுஷேன், நாதன் லியான், மிட்செல் மார்ஷ், நாதன் மெக்ஸ்வீனி, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க்.

இத்தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய வீரர்கள் ஏற்கெனவே தங்களது பயிற்சியை ஆரம்பித்துவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments