FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

சேப்பாக்கம் மைதானத்தில் 300-வது விக்கெட்டை வீழ்த்த நல்ல வாய்ப்பு: ஜடேஜா

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தனது 300-வது விக்கெட்டை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வீழ்த்த நல்ல வாய்ப்பு கிடைத்திருப்பதாக ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.

Updated On : 20 செப்டம்பர் 2024, 8:01 pm IST
ரவீந்திர ஜடேஜா
பகிர்:

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தனது 300-வது விக்கெட்டை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வீழ்த்த நல்ல வாய்ப்பு கிடைத்திருப்பதாக ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.

முதல் டெஸ்ட்

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று (செப்டம்பர் 19) தொடங்கியது.

Advertisement

Advertisement

இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 376 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் அதிகபட்சமாக 113 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, ரவீந்திர ஜடேஜா அதிகபட்சமாக 86 ரன்கள் ரன்கள் எடுத்தார்.

300-வது விக்கெட்

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 376 ரன்களுக்கு ஆட்டமிழக்க, வங்கதேசம் அதன் முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வங்கதேசம் 149 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்தியா தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். சிராஜ், ஆகாஷ் தீப் மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் ரவீந்திர ஜடேஜா கைப்பற்றியுள்ள விக்கெட்டுகளின் எண்ணிக்கை 294 ஆக அதிகரித்துள்ளது. 300 விக்கெட்டுகளைக் கைப்பற்ற அவருக்கு இன்னும் 6 விக்கெட்டுகள் மட்டுமே தேவைப்படுகின்றன.

இந்த நிலையில், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தனது 300-வது விக்கெட்டை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வீழ்த்த நல்ல வாய்ப்பு கிடைத்திருப்பதாக ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தின் தொடக்கத்தில் நான் ஆட்டமிழந்தேன். விளையாட்டில் இதெல்லாம் சகஜம். நாங்கள் தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் நல்ல ஸ்கோரை குவிக்க வேண்டும். நான் பந்துவீச்சில் செயல்படும் விதம் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் எனது 300-வது விக்கெட்டை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வீழ்த்துவதற்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments