FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

10 ஆண்டுகளுக்குப் பிறகு மே.இ.தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலியா!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.

Updated On : 6 பிப்ரவரி 2025, 4:06 pm IST
ஆஸ்திரேலிய அணி - படம் | AP
பகிர்:

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.

ஆஸ்திரேலிய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த தொடர்களுக்கான அட்டவணையை மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.

ஆஸ்திரேலிய அணி கடைசியாக கடந்த 2015-16 ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. அதன் பின், 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் முதலில் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 25 ஆம் தேதி பார்படாஸில் தொடங்குகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டி செயிண்ட் ஜியார்ஜியாவில் ஜூலை 3 ஆம் தேதியும், கடைசி டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் ஜூலை 12 ஆம் தேதியும் தொடங்குகிறது.

இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் ஜூலை 20 ஆம் தேதி தொடங்குகிறது. முதல் இரண்டு போட்டிகள் கிங்ஸ்டனிலும், அடுத்த மூன்று போட்டிகள் செயிண்ட் கிட்ஸிலும் நடைபெறுகிறது.

தென்னாப்பிக்காவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடிய பிறகு, ஆஸ்திரேலிய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments