இந்திய முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு!
இந்திய முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளதைப் பற்றி...
இந்திய முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா அனைத்துவிதமாக கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக வியாழக்கிழமை அறிவித்தார். இதன்மூலம், கிட்டத்தட்ட அவரின் 25 வருட கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.
இந்திய அணிக்காக 22 சர்வதேச டெஸ்ட் போட்டிகள் (76 விக்கெட்டுகள்), 36 ஒருநாள் போட்டிகள்(64 விக்கெட்டுகள்) மற்றும் 10 டி20 போட்டிகளில் (16 விக்கெட்டுகள்) அமித் மிஸ்ரா விளையாடியுள்ளார்.
Advertisement
Advertisement
2003 ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் முத்தரப்பு தொடரில் அறிமுகமான அமித் மிஸ்ரா, அதன்பின்னர்., 2008 ஆம் ஆண்டில் பஞ்சாபின் மொஹாலியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் அறிமுகமானார்.
அதன் தொடர்ச்சியாக, 2013 ஆம் ஆண்டில் ஜிம்பாப்வேக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தி முன்னாள் வீரர் ஜகவல் ஸ்ரீநாத்தின் சாதனையை சமன் செய்தார்.
2014 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் விளையாடிய மிஸ்ரா, 10 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து ஜொலித்துக் கொண்டிருந்த அமித் மிஸ்ரா, இந்திய அணிக்காக கடைசியாக 2017 ஆம் ஆண்டு விளையாடியிருந்தார்.
ஹரியாணாவைச் சேர்ந்தவரான மிஸ்ரா, ஐபிஎல் போட்டிகளில் தில்லி(2008), பஞ்சாப்(2011), ஹைதராபாத்(2013), லக்னௌ(2024) ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார். 162 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 174 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். மேலும், இவர் 3 முறை ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
ஐபிஎல்லில் கடைசியாக ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் லக்னௌ அணிக்காக விளையாடி ஒரு விக்கெட்டை வீழ்த்தியிருந்தார்.
Veteran Leg-Spinner Amit Mishra Announces Retirement From All Forms Of Cricket
இதையும் படிக்க : கமிந்து மெண்டிஸ் அதிரடி; டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இலங்கை!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.