FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

கபில் தேவின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் மிட்செல் ஸ்டார்க்!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவின் சாதனையை ஆஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் முறியடிக்கவுள்ளார்.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 7:33 pm IST
மிட்செல் ஸ்டார்க் - படம் | AP
பகிர்:

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவின் சாதனையை ஆஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் முறியடிக்கவுள்ளார்.

வங்கதேச அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற ஆகஸ்ட் 13 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

வங்கதேசத்துக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கபில் தேவின் சாதனையை மிட்செல் ஸ்டார்க் முறியடிக்க காத்திருக்கிறார். இதுவரை 105 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மிட்செல் ஸ்டார்க் 433 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

Advertisement

Advertisement

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கபில் தேவ் டெஸ்ட் போட்டிகளில் 434 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது, மிட்செல் ஸ்டார்க் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினால் கபில் தேவின் அதிக விக்கெட்டுகள் சாதனையை முறியடிப்பார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் மிட்செல் ஸ்டார்க் முதலிடத்தில் உள்ளார். அவர் 8 போட்டிகளில் 46 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் ஷேன் வார்னே (708), நாதன் லயன் (567), கிளன் மெக்ராத் (563) ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர். அந்த வரிசையில் 433 விக்கெட்டுகளுடன் மிட்செல் ஸ்டார்க் நான்காவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

Australian fast bowler Mitchell Starc is set to break the record held by former Indian captain Kapil Dev.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments