ஆப்கானிஸ்தான் தொடரிலிருந்து விராட் கோலி விலகல்! இந்திய அணிக்குப் பெரும் பின்னடைவு!
ஆப்கானிஸ்தான் ஒருநாள் தொடரிலிருந்து விராட் கோலி விலகியுள்ளதைப் பற்றி...
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விராட் கோலி விலகியுள்ளதாக பிசிசிஐயில் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆப்கானிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் ஒரேயொரு டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடர் வருகிற ஜூன் 6 ஆம் தேதி தொடங்கி 20 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. டெஸ்ட் போட்டி வருகிற ஜூன் 6 ஆம் தேதி முல்லான்பூரில் நடைபெறவிருக்கிறது.
சமீபத்தில் நிறைவடைந்த ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக 156 ரன்களைத் துரத்திப் பிடித்து, ஆர்சிபி அணி தனது இரண்டாவது கோப்பையை வெல்ல விராட் கோலி முக்கியப் பங்காற்றினார். ஆட்டநாயகன் விருதையும் அவர் தட்டிச் சென்றிருந்தார்.
Advertisement
Advertisement
நீண்ட நாள்களுக்குப் பின்னர், மீண்டும் இந்திய ஜெர்ஸியில் விராட் கோலி களமிறங்குவார் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமளிக்கும் வகையில், அவர் தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆப்கானிஸ்தான் தொடரில் இருந்து விலகியுள்ளதாக பிசிசிஐயின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதம் உள்பட 240 ரன்கள் எடுத்திருந்த விராட் கோலி, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் அசத்துவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், இந்திய அணிக்குப் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
விராட் கோலியின் மாற்று வீரரை பிசிசிஐ இன்னும் உறுதிப்படுத்தவில்லை. அவர், ஜூலை 14 முதல் ஜூலை 19 வரை இங்கிலாந்தில் நடைபெறும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பாரா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
India suffered a big blow ahead of the Afghanistan ODIs as star batter Virat Kohli has been ruled out of the series due to a hamstring injury.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.