ஐபிஎல் போட்டியிலிருந்து பிரபல ஆஸி. வீரர் விலகல்
இதையடுத்து ஆல்ரவுண்டர் ஒருவரை அந்த அணி புதிதாகத் தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் 2022 போட்டியிலிருந்து பிரபல ஆஸ்திரேலிய வீரர் நாதன் கோல்டர் நைல் விலகியுள்ளார்.
ஐபிஎல் ஏலத்தில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் நாதன் கோல்டர் நைலை ரூ. 2 கோடிக்குத் தேர்வு செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. கடந்த வருடம் மும்பை அணியிலும் அதற்கு முன்பு ஆர்சிபி, கேகேஆர், தில்லி ஆகிய அணிகளிலும் அவர் இடம்பெற்றார். ஆஸ்திரேலிய அணிக்காக 32 ஒருநாள், 28 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.
34 வயது நாதன் கோல்டர் நைல் இந்த வருட ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக விளையாடி 3 ஓவர்கள் வீசி விக்கெட் எடுக்காமல் 48 ரன்கள் கொடுத்தார். இந்நிலையில் காயம் காரணமாக நாதன் கோல்டர் நைல் ஐபிஎல் 2022 போட்டியிலிருந்து விலகுவதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அறிவித்துள்ளது. இதையடுத்து ஆல்ரவுண்டர் ஒருவரை அந்த அணி புதிதாகத் தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.