FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஒலிம்பிக்ஸ்

அர்ஷத் நதீமுக்கு பரிசாகக் கிடைத்த காரின் பதிவு எண் 92.97!

பரிசு காருக்கு ஈட்டி எறிந்த தூரமான 92.97 மீட்டர் என்ற எண் பதிவு எண்ணாக வழங்கப்பட்டுள்ளது.

Updated On : 13 ஆகஸ்ட் 2024, 8:07 pm IST
அர்ஷத் நதீம், உள்படம்: கார் பதிவு எண் - இன்ஸ்டாகிராம்
பகிர்:

ஒலிம்பிக் தொடரில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற அர்ஷத் நதீமுக்கு சொகுசுக் கார் பரிசாக வழங்கப்பட்டது. அவர், ஈட்டி எறிந்த தூரமான 92.97 மீட்டர் என்ற எண் பதிவு எண்ணாக வழங்கப்பட்டுள்ளது.

2024 பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் நீரஜ் சோப்ராவுக்கு தங்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் எதிர்பாராத விதமாக பாகிஸ்தானைச் சேர்ந்த ஈட்டி எறிதல் வீர அர்ஷத் நதீம் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

அவர் அதிகபட்சமாக 92.97 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து சாதனை படைத்தார். ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை எறியப்பட்ட அதிகபட்ச தூரம் இதுவாகும்.

Advertisement

Advertisement

ஆக. 11ஆம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்த நிலையில், தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த நதீமுக்கு பாகிஸ்தானிலுள்ள பஞ்சாப் மாநில அரசு சொகுசுக் காருடன், ரூ.10 கோடி பரிசாக வழங்கியது.

இந்நிலையில், அவருக்கு பரிசாக வழங்கப்பட்ட சொகுசுக் காருக்கு, 92.97 என்ற எண் பதிவு எண்ணாக வழங்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டியில் 92.97 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து தங்கம் வென்றிருந்த நிலையில், அதனை பதிவு எண்ணாகவே வைத்து கார் பரிசளிக்கப்பட்டுள்ளது.

தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த நதீமுக்கு அவரின் மாமனார் எருமை மாடு ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். எருமை மாடுகள் பாகிஸ்தானில் மிகவும் மதிப்புமிக்கதாக பார்க்கப்படுகின்றன.

உலக தடகள கூட்டமைப்பு 50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் ( இந்திய ரூபாயில் 42 லட்சம்) வழங்கியுள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த அமெரிக்க தொழிலதிபர் அலி ஷேகானி சுஸுகி கார் பரிசளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments