மனு பாக்கர்  
ஒலிம்பிக்ஸ்

பாரீஸ் ஒலிம்பிக்: இந்தியாவுக்கு முதல் பதக்கம்!

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது.

DIN

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது.

துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் வென்றார்.

இதன்மூலம் 2024 ஒலிம்பிக் போட்டியில் இந்தியா தனது பதக்கப் பட்டியலைத் திறந்துள்ளது.

கடந்தமுறை நடந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஒற்றையர் பிரிவில் இறுதிச் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை மனு பாக்கர் இழந்திருந்த நிலையில், இம்முறை பதக்கம் வென்றுள்ளார்.

பாரீஸ் ஒலிம்பிக்கின் 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் பெண்கள் பிரிவில் (பிஸ்டல்) 221.7 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார்.

தென்கொரியாவின் ஓ யே ஜின் என்பவர் 243.2 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை வென்றார். மற்றொரு கொரிய வீராங்கனை கீ யேஜின் 241.3 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

மனு பாக்கர் பதக்கம் வென்றதன் மூலம் துப்பாக்கி சுடுதலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெளிநாட்டில் சிரித்துக் கொண்டிருந்த மோடி, இந்தியா வந்ததும் அழத் தொடங்கிவிட்டார்! தேஜஸ்வி

இடுகாட்டுத் தொழிலாளர்களுக்கு விமான டிக்கெட்: நடிகருக்கு குவியும் வாழ்த்து!

கேப்டன் கூல் தோனி மாதிரி ஆக விரும்பும் பாகிஸ்தான் மகளிரணி கேப்டன்!

1500 முறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திரைப்படம் எது தெரியுமா?

உள்கட்சி பூசல்களை களைய வேண்டும்: தமிழக பாஜக தலைவர்களுக்கு அமித் ஷா அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT