FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

சிங்கப்பூர் ஓபன் 2-ஆவது சுற்றில் சிந்து

சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

Updated On : 13 ஏப்ரல் 2017, 12:54 am IST
பகிர்:

சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
சிங்கப்பூரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் சிந்து தனது முதல் சுற்றில் கடும் போராட்டத்துக்குப் பிறகு 10-21, 21-15, 22-20 என்ற செட் கணக்கில் ஜப்பானின் நஜோமி ஒகுஹராவை தோற்கடித்தார். போட்டித் தரவரிசையில் 5-ஆவது இடத்தில் இருக்கும் சிந்து தனது 2-ஆவது சுற்றில் இந்தோனேசியாவின் ஃபிட்ரியானியை எதிர்கொள்கிறார்.
மற்றொரு இந்திய வீராங்கனையான ரிதுபர்னா 18-21, 13-21 என்ற நேர் செட்களில் சீன தைபேவின் ஷூ யா சிங்கிடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சாய் பிரணீத் 17-21, 21-7, 21-19 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் எமில் ஹோல்ஸ்டை தோற்கடித்தார். 2-ஆவது சுற்றில் சீனாவின் கியாவ் பின்னை சந்திக்கிறார் சாய் பிரணீத்.
அதேநேரத்தில் இந்தியாவின் செளரவ் வர்மா 15-21, 14-21 என்ற நேர் செட்களில் இந்தோனேசியாவின் அந்தோணி சினிசுகாவிடமும், சமீர் வர்மா 26-28, 21-23 என்ற நேர் செட்களில் ஹாங்காங்கின் ஹூ யூனிடமும் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினர்.
மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா-சிக்கி ரெட்டி ஜோடி 21-19, 21-19 என்ற நேர் செட்களில் மலேசியாவின் இயின் லூ லிம்-யாப் செங் வென் ஜோடியைத் தோற்கடித்தது.
கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ்-மணீஷா ஜோடி 13-21, 21-16, 11-21 என்ற செட் கணக்கில் சீன தைபேவின் லூ சிங் யாவ்-சியாங் கை ஷின் ஜோடியிடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறியது.
ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மானு அத்ரி-சுமீத் ரெட்டி ஜோடி 8-21, 16-21 என்ற நேர் செட்களில் ஜப்பானின் டகேஷி குமுரா-கெய்கோ சொனோடா ஜோடியிடம் தோல்வி கண்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments