FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: மே.இ. தீவுகள் அணி அறிவிப்பு

இந்தியாவில் ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள மே.இ. தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 31 ஜனவரி 2022, 12:00 pm IST
கேப்டன் பொலார்ட்
பகிர்:

இந்தியாவில் ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள மே.இ. தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

மே.இ. தீவுகள் அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடர் பிப்ரவரி 6 அன்றும் டி20 தொடர் பிப்ரவரி 16 அன்றும் தொடங்குகின்றன. ஒருநாள் தொடர் ஆமதாபாத்திலும் டி20 தொடர் கொல்கத்தாவிலும் நடைபெறவுள்ளன. 

ஒருநாள் தொடருக்கான மே.இ. தீவுகள் அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இரண்டரை வருடங்கள் கழித்து கெமர் ரோச் அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார். 

Advertisement

Advertisement

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 3-2 என மே.இ. தீவுகள் அணி வென்றுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய அதே மே.இ. தீவுகள் அணி வீரர்கள், இந்தியாவில் நடைபெறும் டி20 தொடருக்கும் தேர்வாகியுள்ளார்கள். 

பொலார்ட், ஃபேபியன் ஆலன், டேரன் பிராவோ, ஜேசன் ஹோல்டர், ஷாய் ஹோப், அகேல் ஹுசைன், பிராண்டன் கிங், நிகோலஸ் பூரன், ரொமாரியோ ஷெப்பர்ட், ஒடியன் ஸ்மித், ஹேடன் வால்ஷ் ஜூனியர் ஆகியோர் ஒருநாள், டி20 என இரு அணிகளிலும் இடம்பிடித்துள்ளார்கள். 

மே.இ. தீவுகள் டி20 அணி

பொலார்ட் (கேப்டன்), நிகோலஸ் பூரன் (துணை கேப்டன்), ஃபேபியன் ஆலன், டேரன் பிராவோ, ராஸ்டன் சேஸ், ஷெல்டன் காட்ரல், டொமினிக் டிரேக்ஸ், ஜேசன் ஹோல்டர், ஷாய் ஹோப், அகேல் ஹுசைன், பிராண்டன் கிங், ரோவ்மன் பவல், ரொமாரியோ ஷெப்பர்ட், ஒடியன் ஸ்மித், கைல் மேயர்ஸ், ஹேடன் வால்ஷ் ஜூனியர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments