FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

நமீபியாவை வீழ்த்தி சூப்பர் 12 சுற்றுக்கு அருகில் சென்ற நெதர்லாந்து!

தகுதிச்சுற்று ஆட்டத்தில் நமீபியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது நெதர்லாந்து அணி.

Updated On : 18 அக்டோபர் 2022, 1:43 pm IST
நெதர்லாந்து அணி (கோப்புப் படம்)
பகிர்:

டி20 உலகக் கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் நமீபியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது நெதர்லாந்து அணி.

முதல் ஆட்டத்தில் இரு அணிகளும் வெற்றி கண்டன. நெதர்லாந்து அணி ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தியது. இலங்கையைத் தோற்கடித்து ஆச்சர்யம் அளித்தது நமீபியா. 

இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற நமீபியா கேப்டன் எராஸ்மஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இலங்கைக்கு எதிராக 163 ரன்கள் எடுத்த நமீபியா, நெதர்லாந்துக்கு எதிராக 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்தது. ஜான் பிரைலிங் 43 ரன்கள் எடுத்தார். ஒரு பந்துவீச்சாளரைத் தவிர மற்ற அனைவரும் சிறப்பாகப் பந்துவீசி ரன்களைக் கட்டுப்படுத்தினார்கள். இன்றைய ஆட்டத்தில் வெல்லும் அணி, சூப்பர் 12 சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பு அதிகமாகும் என்பதால் வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாகப் போராடும் என எதிர்பார்க்கப்பட்டது.

Advertisement

Advertisement

அதேபோல ஆட்டமும் கடைசி ஓவர் வரை சென்றது. 13-வது ஓவரின் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்து இலக்கை நோக்கி நன்றாக சென்றுகொண்டிருந்தது நெதர்லாந்து. நடுவில் 4 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்ததால் சரிவைச் சந்தித்தது. எனினும் நடுவரிசை வீரர் லீட் கடைசி வரை உறுதியாக நின்று வெற்றிக்கு வழிவகுத்தார். அவர் 30 ரன்கள் எடுத்தார். 19.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்து 2-வது வெற்றியைப் பெற்றது நெதர்லாந்து. இன்னும் ஒரு ஆட்டமே மீதமுள்ள நிலையில் நெதர்லாந்து சூப்பர் 12 சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. 

அக்டோபர் 20 அன்று கடைசி ஆட்டத்தில் நெதர்லாந்து இலங்கையுடனும் நமீபியா ஐக்கிய அரபு அமீரகத்துடனும் மோதுகின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments