டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிரபல வங்கதேச வீரர்
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாகப் பிரபல வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் ருபல் ஹுசைன் அறிவித்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாகப் பிரபல வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் ருபல் ஹுசைன் அறிவித்துள்ளார்.
32 வயது ருபல் ஹுசைன், வங்கதேச அணிக்காக 2009 முதல் 27 டெஸ்டுகள், 104 ஒருநாள், 28 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 2020 பிப்ரவரிக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் விளையாடவில்லை. கடந்த ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு அவர் வங்கதேச அணியில் இடம்பெறவில்லை. 2021 டி20 உலகக் கோப்பை அணியில் ருபல் ஹுசைன் இடம்பெற்றிருந்தாலும் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ருபல் ஹுசைன் இன்று அறிவித்துள்ளார். இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்புகள் அளிக்கப்பட்டால் வங்கதேசம் பலமுள்ள அணியாக மாறும் என அவர் கூறியுள்ளார். 27 டெஸ்டுகளில் விளையாடியுள்ள ருபல் ஹுசைன் 36 விக்கெட்டுகளும் 265 ரன்களும் எடுத்துள்ளார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.