காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்!
காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இருந்து ஆஸ்திரேலியாவின் முக்கிய வீரர் விலகியுள்ளது ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
13வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. 50 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெறும் இத்தொடரில் 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
இத்தொடரில் இதுவரை 31 ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன. இன்னும் 14 லீக் போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ளன. இதுவரை எந்த அணியும் அரையிறுதியை எட்டவில்லை.
இத்தொடரில் பங்கேற்றுள்ள முன்னாள் சாம்பியனான ஆஸ்திரேலிய அணி முதல் 2 போட்டிகளில் தோல்வி அடைந்தது. அதன்பின் நடைபெற்ற 4 ஆட்டங்களிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ளது.
Advertisement
Advertisement
ஆஸ்திரேலிய அணி அடுத்த ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்கொள்ள உள்ளது. இப்போட்டி நவம்பர் 4-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறும் போட்டியில் இருந்து, காயம் காரணமாக ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் விலகியுள்ளார்.
இதையும் படிக்க: அந்தந்த மாநில மொழிகளில் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்: கர்நாடக முதல்வர் வலியுறுத்தல்!
குஜராத்தில் கோல்ஃப் வண்டியில் சவாரி செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மேக்ஸ்வெல் தவறி விழுந்தார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. காயத்தின் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இருந்து மேக்ஸ்வெல் விலகியுள்ளார்.
அரையிறுதியை நெருங்கும் நேரத்தில், இங்கிலாந்துடனான முக்கிய போட்டியில் மேக்ஸ்வெல் இல்லாதது ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதேநேரம், அவருக்கு பதிலாக மாற்று வீரர்கள் யாரும் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.