வங்கதேசம் - பாகிஸ்தான் இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெறுமா?
வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
வங்கதேசத்தில் வன்முறை கட்டுக்கடங்காமல் சென்றுள்ளது. வன்முறை அதிகரித்ததால் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜிநாமா செய்து, நாட்டை விட்டு வெளியேறினார். இதனையடுத்து, ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.
இந்த நிலையில், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Advertisement
Advertisement
வங்கதேச அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் வருகிற ஆகஸ்ட் 21 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. வங்கதேசத்தில் தற்போது ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதற்கிடையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில், முன்கூட்டியே வங்கதேச வீரர்கள் பாகிஸ்தானுக்கு வந்தாலும் அவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தருகிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் இந்த கோரிக்கைக்கு வங்கதேசம் தரப்பில் இதுவரை எந்த ஒரு பதிலும் தெரிவிக்கப்படாதது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.