FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

டி20 உலகக் கோப்பையில் சுவாரசியம்: தேர்வுக்குழுத் தலைவர், தலைமைப் பயிற்சியாளர் ஃபீல்டிங்!

ஆஸ்திரேலியாவின் தேர்வுக்குழுத் தலைவர் , தலைமைப் பயிற்சியாளர் ஃபீல்டிங் செய்துள்ளது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.

Updated On : 29 மே 2024, 3:10 pm IST
தேர்வுக்குழுத் தலைவர் ஜியார்ஜ் பெய்லி - படம்: கிரிக்கெட் ஆஸ்திரேலியா
பகிர்:

டி20 உலகக் கோப்பையின் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் தேர்வுக்குழுத் தலைவர், தலைமைப் பயிற்சியாளர் ஃபீல்டிங் செய்துள்ளது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.

டி20 உலகக் கோப்பை வரும் ஜூன் 1 முதல் தொடங்கவுள்ளது. முதல்முறையாக இந்தாண்டு 20 அணிகள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளன. தற்போது பயிற்சி ஆட்டங்கள் தொடங்கியுள்ளன. இதில் ஆஸ்திரேலியா நமீபியா அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் 9 சர்வதேச ஆஸி. வீரர்கள் மட்டுமே விளையாடினார்கள். மீதமுள்ள 4 பேருக்கு பதிலாக ஆஸியின் தேர்வுக்குழுத் தலைவர் ஜியார்ஜ் பெய்லி, தலைமைப் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக் டொனால்ட் மற்றும் 2 உதவி பயிற்சியாளர்களும் ஃபீல்டிங் செய்தனர்.

Advertisement

Advertisement

முதலில் விளையாடிய நமீபியா 119 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஜான் கிரீன் 38 ரன்கள் எடுத்தார். ஆடம் ஜாம்பா 3 விக்கெட்டுகள், ஹேசில்வுட் 2 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்கள்.

அடுத்து ஆடிய ஆஸி. 10 ஓவர்களில் 123 ரன்கள் எடுத்து வென்றது. வார்னர் 54*, மிட்செல் மார்ஷ் 18, டிம் டேவிட் 23, வேட் 12 ரன்களும் எடுத்தார்கள்.

இரண்டு மாதம் ஐபிஎல் போட்டி விளையாடியுள்ளதால் பாட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட், மிட்செல் ஸ்டார்க், ஸ்டாய்னிஸ், மேக்ஸ்வெல் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அதனால்தான் இவர்களுக்கு பதிலாக தேர்வுக்குழுத் தலைவர், தலைமைப் பயிற்சியாளர் ஃபீல்டிங் செய்தார்கள். இந்த நிகழ்வு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments