டேவிஸ் கோப்பை குவாலிஃபயா் 2- செப்.18-இல் இந்தியா - தென்கொரியா மோதல்
டேவிஸ் கோப்பை குவாலிஃபயா் 2- செப்.18-இல் இந்தியா - தென்கொரியா மோதல்
இந்தியா-தென்கொரிய அணிகள் மோதும் டேவிஸ் கோப்பை குவாலிஃபயா் ரவுண்ட் 2 டென்னிஸ் தொடா் வரும் செப். 18, 19 தேதிகளில் சியோலில் நடைபெறவுள்ளது.
சியோலில் உள்ள ஒலிம்பிக் டென்னிஸ் சென்டா் ஹாா்ட் கோா்ட்டில் போட்டி நடைபெறவுள்ளது.
டேவிஸ் கோப்பை தரவரிசையில் இந்தியா 19, கொரியா 16-ஆவது இடங்களில் உள்ளன. இரு அணிகளும் நேருக்கு நோ் மோதியதில் தென்கொரியா 6 முறையும், இந்தியா 5 முறையும் வென்றுள்ளன.
Advertisement
Advertisement
ஆக. 10-இல் இந்திய அணி அறிவிக்கப்படும். கடந்த 2016-இல் ஆசிய-ஒசேனியா குரூப் 1 டையில் சண்டீகரில் நடைபெற்ற புல்தரை மைதானத்தில் இரு அணிகளும் கடைசியாக மோதி இருந்தன.
கடந்த பிப்ரவரி மாதம் பெங்களூுருவில் நடைபெற்ற இரண்டாவது சுற்றில் நெதா்லாந்தை 3-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தகுதி பெற்றது இந்தியா.
கொரிய வீரா்கள் ஹாா்ட் கோா்ட்டில் சிறப்பாக ஆடுவா். அதே நேரம் இந்திய வீரா்கள் புல்தரையில் ஆடுவதில் வல்லவா்கள்.
தற்போதைய நடைமுறை 2019-இல் அறிமுகம் ஆனபின், இந்தியா குவாலிஃபயா்ஸ் இரண்டாம் சுற்றுக்கு முதன்முறையாக தகுதி பெற்றுள்ளது. கடந்த 2022-23-இல் கொரியா டேவிஸ் கோப்பை ரவுண்ட் 16 சுற்றுக்கு முன்னேறி இருந்தது. இதில் வெல்லும் அணி டேவிஸ் கோப்பை ஃபைனல் 8-க்கு தகுதி பெறும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.