அர்ஜுனா விருது வென்ற ட்ரீசா ஜாலி/காயத்ரி கோபிசந்த் காலிறுதிக்கு முன்னேற்றம்!
உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ட்ரீசா/காயத்ரி காலிறுதிக்கு முன்னேறியது குறித்து...
உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் காலிறுதிக்கு முன்னேறிய இந்திய மகளிர் ட்ரீசா ஜாலி/காயத்ரி கோபிசந்த் இணை காலிறுதி சுற்றுக்குத் தகுதிபெற்றது.
உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஆக.17 முதல் 23ஆம் தேதி வரை புதுதில்லியில் நடைபெற இருக்கின்றன. கடந்த 2009 ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக இந்தியா தனது சொந்த மண்ணில் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்துகிறது.
மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ட்ரீசா ஜாலி/காயத்ரி கோபிசந்த் இணையினர் ஜப்பானின் ரின் இவானகா / கீ நகானிஷி இணையினருடன் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் விளையாடினார்கள்.
Advertisement
Advertisement
இந்தப் போட்டியில் இந்திய இணையினர் 21- 16, 21- 12 என்ற நேர் கேம்களில் வென்று அசத்தினார்கள். இதன்மூலம் இந்த உலக சாம்பியன்ஷிப்பில் காலிறுதிக்கு முன்னேறிய முதல் இந்தியர்கள் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார்கள்.
சீன வீராங்கனைகளுடன் இந்திய வீராங்கனைகள் காலிறுதியில் நாளை மதியம் 1.30 மணிக்கு பலப்பரீட்சை செய்யவிருக்கிறார்கள்.
சமீபத்தில் மத்திய அரசு அறிவித்த அர்ஜுனா விருதுகள் பட்டியலில் ட்ரீசா ஜாலி/காயத்ரி கோபிசந்த் இணையினர் தேர்வாகியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Arjuna award winners Treesa Jolly and Gayatri Gopichand seal their spot in the Women's Doubles Quarterfinals
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.