FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பேலந்தோர்: சிறந்த இளம் வீரருக்கான பரிந்துரையில் ஸ்பெயினின் இரண்டு வீரர்கள் தேர்வு!

பேலந்தோர் வெளியிட்டுள்ள இந்தாண்டுக்கான சிறந்த இளம் வீரருக்கான பட்டியல் குறித்து...

8 செப்டம்பர் 2026, 7:09 pm IST
பௌ குபார்சி, லமின் யமால். - படம்: எக்ஸ் / எஃப்சி பார்சிலோனா
பகிர்:

பேலந்தோர் வெளியிட்டுள்ள இந்தாண்டுக்கான சிறந்த இளம் வீரருக்கான பட்டியலில் பார்சிலோனா அணியின் இளம் வீரர்கள் இருவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்கள்.

பிரான்ஸ் நாட்டில் கால்பந்துக்கென பிரத்யேகமாக வெளியாகும் பிரான்ஸ் ஃபுட்கால் என்ற மாத இதழின் சார்பாக பேலந்தோர் விருது அளிக்கப்படுகிறது. அதில பல வகைகளில் விருதுகள் அளிக்கப்படுகின்றன.

கடந்த 2025-26 சீசனில் சிறந்த இளம் வீரருக்கான பட்டியலில் 10 வீரர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்கள். இதில் ஒருவருக்கு இந்த விருது ஓட்டு எடுப்பின் மூலமாக அறிவிக்கப்படும். இதில் ஸ்பெயின் மற்றும் பார்சிலோனா அணியில் இருந்து இருவர் தேர்வாகியுள்ளார்கள்.

Advertisement

Advertisement

ஸ்பெயின் அணி உலகக் கோப்பையை வென்றது. இதில் சிறந்த தடுப்பாட்டத்தை வெளியிட்ட பௌ குபார்சிக்கு சிறந்த இளம் வீரர் விருது வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

சிறந்த இளம் வீரருக்கான பரிந்துரைகள்

கெரிம் அலாஜ்பெகோவிக் (ஜெர்மனி அணி, போஸ்னியா கிளப்)

அய்யூப் பௌதி (மொராக்கோ அணி, மான்செஸ்டர் சிட்டி கிளப்)

பௌ குபார்சி (ஸ்பெயின் அணி, பார்சிலோனா கிளப்)

யான் டியோமாண்டே (ஐவரி காஸ்ட் அணி, ரியல் மாட்ரிட் கிளப்)

லெனார்ட் கார்ல் (ஜெர்மனி அணி, பயர்ன் மியூனிக் கிளப்)

எலி ஜூனியர் குரூபி (பிரான்ஸ் அணி, போர்ன்மத் கிளப்)

லமின் யமால் (ஸ்பெயின் அணி, பார்சிலோனா கிளப்)

ஜோஹன் மன்சாம்பி (ஸ்விட்சர்லாந்து அணி, ஆஸ்டன் வில்லா)

ஆபிரகாம் மசா (அல்ஜீரியா அணி, லெவர்குசன் கிளப்)

வாரன் ஜைர்-எமெரி (பிரான்ஸ் அணி, பிஎஸ்ஜி கிளப்)

summary

Ballon d'Or released Nominated for the 2026 Men's Young Talent of the Year

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments