FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

லா லிகா: ஆகஸ்ட் மாத சிறந்த வீரருக்கான விருதை வென்ற ரபீனியா!

லா லிகா கால்பந்துத் தொடரின் 2026/27 சீசனின் ஆகஸ்ட் மாத சிறந்த வீரருக்கான விருதை வென்ற ரபீனியா குறித்து...

12 செப்டம்பர் 2026, 1:57 pm IST
கோல் அடித்த மகிழ்ச்சியில் ரபீனியா. - படம்: பார்சிலோனா
பகிர்:

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்துத் தொடரின் 2026/27 சீசனின் ஆகஸ்ட் மாத சிறந்த வீரருக்கான விருதை பார்சிலோனா வீரர் ரபீனியா வென்றார்.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த ரபீனியா பார்சிலோனா கால்பந்து அணியின் முதன்மை கேப்டனாக விளையாடி வருகிறார். நடப்பு 2026/27 சீசனில் அசத்தலாக விளையாடி வருகிறார்.

ஆகஸ்ட் மாதத்தில் லா லிகா தொடரில் மட்டுமே ரபீனியா 5 கோல்கள், 1 அசிஸ்ட் செய்து அசத்தினார். லா லிகா தொடரிலேயே அதிக கோல்கள் அடித்தவராக முன்னேறியுள்ளார்.

Advertisement

Advertisement

எல்சி அணிக்கு எதிராக 2 கோல்கள், அத்லெடிக் பில்போ உடன் 1, ராயோ வெலான்சியோ உடன் 2 கோல்கள் அடித்துள்ளார். இவரது சிறப்பான ஆட்டத்தினால் புள்ளிப் பட்டியலிலும் பார்சிலோனா அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது.

பார்சிலோனா வரலாற்றிலேயே முதல் நான்கு போட்டிகளிலும் கோல் அடித்தவர்கள் பட்டியலில் ரபீனியா நான்காவது இடம் பிடித்துள்ளார். முன்னதாக ரோட்ரிகஸ் (1950/51), குபாலா (1953/54), கயேட்டானோ ரே (1964/65), ஸ்லடான் இப்ரமோவிச் (2009/10), செக் ஃபேப்ரெகெஸ் (2011/12) இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தார்கள்.

முன்னதாக 2024 ஆகஸ்ட் மாதமும் இந்த விருதினை ரபீனியா வென்றிருந்தார். இது இரண்டாவது முறை என்பதும் கவனிக்கத்தக்கது.

பார்சிலோனா வரலாற்றிலேயே லியோனல் மெஸ்ஸி இந்த மாத விருதினை 8 முறையும் லமின் யமால், லூயிஸ் சௌரஸ் தலா 4 முறையும் லெவண்டாவ்ஸ்கி 3 முறையும் வென்றுள்ளார்கள்.

summary

FC Barcelona player Raphinha La Liga Player of the Month for August 2026/27

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments