FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
டி20 உலகக் கோப்பை

பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் பந்தை சேதப்படுத்தியதாக அமெரிக்க வீரர் குற்றச்சாட்டு!

பாகிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சாளர் பந்தை சேதப்படுத்தியதாக அமெரிக்க வீரர் ரஸ்டி தெரான் குற்றம்சாட்டியுள்ளார்.

Updated On : 7 ஜூன் 2024, 3:30 pm IST
- படம் | AP
பகிர்:

பாகிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரௌஃப் பந்தை சேதப்படுத்தியதாக அமெரிக்க வீரர் ரஸ்டி தெரான் குற்றம்சாட்டியுள்ளார்.

டி20 உலகக் கோப்பையில் அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று (ஜூன் 6) நடைபெற்றது. இந்தப் போட்டியில் சூப்பர் ஓவரில் பாகிஸ்தானை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அமெரிக்க அணி த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது.

இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரௌஃப் பந்தை சேதப்படுத்தியதாக அமெரிக்க வீரர் ரஸ்டி தெரான் குற்றம்சாட்டியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

இது தொடர்பாக அவர் தெரிவித்திருப்பதாவது: புதிதாக மாற்றப்பட்ட பந்தை பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரௌஃப் தனது கட்டை விரல் நகத்தினால் சேதப்படுத்தியது தெளிவாக தெரிந்தது. அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என இருக்கப் போகிறோமா? எனத் தெரிவித்துள்ளார்.

நேற்றையப் போட்டியில் பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரௌஃப் 4 ஓவர்கள் வீசி 37 ரன்கள் விட்டுக்கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments