அரசுப் பள்ளிகளை மூடக்கூடாது: ஜி.ராமகிருஷ்ணன்
மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள அரசுப் பள்ளிகளை மூடும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்
மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள அரசுப் பள்ளிகளை மூடும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வியாழக்கிழû ம கூறியதாவது:
மத்திய அரசின் நிதி கிடைக்காது என்ற காரணத்தால், 15 மாணவர்களுக்கும் குறைவாக சேர்க்கை உள்ள பள்ளிகளை மூட தமிழக அரசுத் திட்டமிட்டிருப்பதாக செய்தியகள் வெளிவந்துள்ளன. இவ்வாறு தமிழகம் முழுவதும் 800 -க்கும் அதிகமான பள்ளிகள் அடையாளம் காணப்பட்டு, அவற்றை அருகில் உள்ள அரசுப் பள்ளிகளுடன் இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இவ்வாறு பள்ளிகள் மூடப்படுவதால், ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவர். நீண்ட தூரம் பயணிப்பது, போக்குவரத்துச் செலவு என்பன போன்ற சிக்கல்களையும் சந்திக்க நேரிடும். எனவே, அரசுப் பள்ளிகள் மூடும் முடிவை தமிழக அரசு கைவிட்டு, மாணவர் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார் ஜி.ராமகிருஷ்ணன்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.