முகப்பு
தமிழ்நாடு

கோவை மாணவி தற்கொலை விவகாரம்: விசாரணை நிறைவு

கோவையில்  பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளின்  விசாரணை நிறைவு பெற்றது.

Updated On : 16 நவம்பர் 2021, 2:47 pm IST
பகிர்:

கோவையில்  பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளின்  விசாரணை நிறைவு பெற்றது. இது தொடர்பாக விரைவில் அறிக்கை சமர்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோவையில் 17 வயது மாணவி பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லையளித்து தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கோவையில் உள்ள தனியார் பள்ளி இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி கைது செய்யப்பட்டார்.

மாணவி புகார் அளித்தும் போலிஸில் தகவல் சொல்லாமல் இருந்த அப்பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சனையும் போலீஸார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

Advertisement

Advertisement

இதனைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித் துறை சார்பில் தொடர்ந்து பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்நிலையில் பள்ளி கல்வித் துறை விசாரணை திங்கள்கிழமையுடன் நிறைவான நிலையில், அறிக்கை தயார் செய்யும் பணி நடந்து வருகிறது.

 பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக தனியார் பள்ளி நிர்வாகத்திடம் மேற்கொண்ட விசாரணையின் அறிக்கையை பள்ளிக் கல்வித் துறையிடம் புதன்கிழமை சமர்ப்பிக்க உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments