FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தென்மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்து சேவை நிறுத்தம்!

நெல்லை - மதுரை நெடுஞ்சாலையில் இருந்து கயத்தாறு செல்லும் வழியில் உள்ள பாலங்கள் நீரில் மூழ்கின.

6 பிப்ரவரி 2024, 6:58 pm IST
பகிர்:

தொடர் கனமழை பெய்து வருவதால் தென்மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துகள் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. 

வெள்ளத்தால் பேருந்துகள் இயக்க முடியாத சூழல் நிலவுவதால், சென்னையிலிருந்து 200க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. 

தூத்துக்குடி - திருச்செந்தூர் வழித்தடத்தில் சென்ற அரசுப் பேருந்து வெள்ளத்தில் சிக்கியதால், பேருந்து சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கிய பேருந்தில் இருந்த பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். 

Advertisement

Advertisement

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு - தேவர்குளம் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் போக்குவரத்து சேவை அந்த மார்க்கத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 

சாலையோரம் இருந்த சிலிண்டர் கிடங்கில் வெள்ளம் புகுந்ததால், சிலிண்டர்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன. 

நெல்லை - மதுரை நெடுஞ்சாலையில் இருந்து கயத்தாறு செல்லும் வழியில் உள்ள பாலங்கள் நீரில் மூழ்கின. இதனால் அந்த வழித்தடத்திலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments