FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ஐபிஎல் டிக்கெட்: விடியவிடிய மழையில் காத்திருக்கும் ரசிகர்கள்

சென்னையில் வரும் சனிக்கிழமை நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டை வாங்க விடியவிடிய மைதானத்திற்கு வெளியே மழையில் ரசிகர்கள் காத்துள்ளனர்.

Updated On : 3 மே 2023, 9:26 am IST
படம்: டிவிட்டர்/சென்னை சூப்பர் கிங்ஸ்
பகிர்:

சென்னையில் வரும் சனிக்கிழமை நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டை வாங்க விடியவிடிய மைதானத்திற்கு வெளியே மழையில் ரசிகர்கள் காத்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்ததால் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படாமல் இருந்தன. இந்தாண்டு அனைத்து பணிகளும் முடிவடைந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தாண்டு சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை சென்னை அணி விளையாடிய நான்கு போட்டிகளிலும் மைதானம் நிரம்பி வலிந்தன.

Advertisement

Advertisement

இந்நிலையில், வரும் 6-ஆம் தேதி சென்னை, மும்பை அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நேரடியாக விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த டிக்கெட்டுகளை வாங்க நேற்று இரவு முதல் கொட்டும் மழையில் விடியவிடிய ரசிகர்கள் காத்துள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி விளையாடும் கடைசி ஐபிஎல் தொடர் என்று தகவல்கள் பரவி வரும் நிலையில், சென்னை அணி விளையாடும் அனைத்து போட்டிகளையும் காண ரசிகர்கள் படையெடுத்துள்ளனர்.

ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் நேரடியாக மைதானத்திலும், பேடிஎம் செயலிகள் மூலம் இணையத்திலும் விற்பனை செய்யப்படுகிறது.

ரூ. 1,500-க்கு விற்பனை செய்யப்படும் டிக்கெட்டுகள் மைதானத்தின் நேரடி கவுண்டர்களில் மட்டுமே கிடைக்கின்றன. ஆன்லைனில் ரூ. 2,500 முதல் ரூ. 5,000 வரையில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments